ஆன்லைன் ரம்மி விளையாட்டால் உடல்நலம் பாதிப்பு - கோவையில் வாலிபர் தற்கொலை!

கோவை வெள்ளலூர் பகுதியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மூழ்கி உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வாலிபர் குணமாகாததால், விரக்தியடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: வெள்ளலூர் பகுதியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பட்டதாரி இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளலூர் அடுத்த கருப்பராயன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மதன்குமார் (25). தந்தையை இழந்த இவர் தாயாருடன் வசித்து வந்துள்ளார். இவரது தாயார் நாகலட்சுமி கூலித்தொழிலாளி ஆவார். மதன்குமார் இளங்கலை மென்பொருள் பட்டப் படிப்பை முடித்து விட்டு தனியார் நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

கடந்த ஒரு வருடமாக வேலை கிடைக்காமல் வீட்டிலிருந்திருக்கின்றார். இந்நிலையில் இவர் செல்போன் மூலம் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளார். இதனால் நாளடைவில் மதன்குமாருக்கு கடுமையான கழுத்து வலி மற்றும் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது.

இதற்குச் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது.வீட்டில் தனியாக இருந்த மதன்குமார் விரக்தியுடன் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் மதன்குமார் தாயார் வேலைக்குச் சென்றவுடன், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உறவினர்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போத்தனூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...