உடுமலை அருகே அரசு பேருந்து மீது ஆம்னி வேன் மோதி விபத்து - 6 பேர் படுகாயம்!

உடுமலை அருகே வேடசந்தூரிலிருந்து கோவை நோக்கி சென்ற ஆம்னி வேன், அரசு பேருந்து மீது மோதிய விபத்தில், ஆம்னி வேனில் பயணம் செய்த ஆறு பேர் படுகாயமடைந்து, உடுமலை மற்றும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி.



திருப்பூர்: உடுமலை அருகே அரசு பேருந்து மீது, ஆம்னி வேன் மோதிய விபத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியாரில் சிற்றுண்டி உணவகம் நடத்தி வருபவர் சீனிவாசன். இவர் தனது ஆம்னி வேனில் குடும்பத்துடன், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் பொள்ளாச்சிக்கு திரும்பி கொண்டிருந்தார்.



இந்நிலையில் ஆம்னி வேன் பாலப்பம்பட்டி அருகே வந்த போது, எதிரில் கோவையிலிருந்து பழனி சென்ற அரசு பேருந்து மீது மோதியது.



இந்த விபத்தில் ஆம்னி வேனில் பயணம் செய்த சதீஷ்(25), ராஜேஸ்வரி(50), சிங்காரம்(60), வேணுகோபால்(80), பூவாத்தா(16) மற்றும் சீனிவாசன்(52) ஆகிய ஆறு பேர் படுகாயம் அடைந்தனர்.



இந்த நிலையில் அருகிலிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கும், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனக்ர்.

இதனிடையே விபத்து தொடர்பாக உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...