தாராபுரத்தில் சீமானை கண்டித்து தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அருந்ததியர் மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தாராபுரத்தில் தமிழ் புலிகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



திருப்பூர்: தாராபுரம் அண்ணா சாலை முன்பு நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் காளிமுத்து தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் திருவுருவப்படத்தை கிழித்து சேதப்படுத்தினர்.



மேலும், அவதூறாக பேசிய சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும், அவரை தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சீமானுக்கு எதிராக கண்டன முழக்கங்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எழுப்பினர்.

தமிழ் புலிகள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் முகிலரசன் பேசுகையில், ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தின்போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மோகனாவை ஆதரித்து கட்சியின் தலைமை

ஒருங்கிணைப்பாளர் சீமான் நடத்திய பிரச்சார பொதுக்கூட்டம் கடந்த 13 ஆம் தேதி திருநகர் காலனியில் நடைபெற்றது.

அதில் பேசிய சீமான், அருந்ததியர் மக்களை இழிவுபடுத்திவிட்டார். எனவே, தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வேண்டும், என்றார்.



இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் முகிலரசன், மேற்கு மண்டல துணைச் செயலாளர் ஒண்டிவீரன், மாவட்ட செயலாளர் வடிவேல், வழக்கறிஞரணி செந்தில் குமார் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...