கோவை இஸ்லாமியக் கல்லூரி பட்டமளிப்பு விழா - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கோவையில் உள்ள ஹிதாயா மகளிர் கல்லூரியில் நடைபெற்ற 4வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில், 68 மாணவியருக்கு ஆலிமா ஹாதியா எனும் பட்டம் வழங்கப்பட்டது.



கோவை: கோவையில் உள்ள ஹிதாயா மகளிர் கல்லூரியின் ‘நான்காம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கரும்புக்கடை பகுதியில் செயல்பட்டுவரும் இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மைதானத்தில் ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியில் பயின்ற 68 மாணவியருக்கு ‘ஆலிமா ஹாதியா’ எனும் பட்டம் வழங்கப்பட்டன.



ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியின் தாளாளர் மௌலவி. M.முஹம்மது இஸ்மாயில் இம்தாதி வரவேற்புரை ஆற்றினார். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலத் தலைவர் மௌலவி ஹனீஃபா மன்பஈ தலைமை உரையாற்றினார்.



இந்த நிகழ்ச்சியில், பாரதியார் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறைத்தலைவர் மற்றும் சமுதாயக் கல்லூரிகளின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் S.சம்பத் குமார் மற்றும் மெட்ராஸ் பல்கலைக்கழகம் மற்றும் பாரதியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் முன்னாள் ஆங்கில மொழித்துறையின் பேராசிரியர் முனைவர் R.பழனிவேல் ஆகியோர் சமுதாயக் கல்லூரியில் பயின்று பட்டயப்படிப்பினை வெற்றிகரமாக முடித்த மாணவியருக்கு வாழ்த்துரை வழங்கி சான்றிதழ்களை வழங்கி பாராட்டுத் தெரிவித்தனர்.



தொடர்ந்து, இந்த சமூகத்திற்கு செய்யவேண்டிய பங்களிப்பு குறித்து தனது சிறப்புரையில் நினைவூட்டியதுடன் ‘ஆலிமா ஹாதியா’ பட்டம் மற்றும் கேடயத்தை அவர் வழங்கினார். லால்பேட்டை ஜாமியா மான்பஉல் அன்வார் கல்லூரியின் முதல்வர் மற்றும் கடலூர் மாவட்ட அரசு காஜி, மௌலானா மௌலவி முஃப்தி. A. நூருல் அமீன் ஹல்ரத் மன்பஈ .ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகரத் தலைவர் ஜனாப் P.S.உமர் ஃபாரூக் நன்றி உரையாற்றினார்.



இந்த பட்டமளிப்பு விழாவில் அறிஞர் பெருமக்கள், ஆன்றோர்கள், சமூகத் தலைவர்கள், மாணவிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...