பொள்ளாச்சியில் சீமான் உருவபொம்மையை எரிக்க முயற்சி - தமிழ் புலிகள் கட்சியினர் கைது

ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அருந்ததிய மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறி பொள்ளாச்சி காந்தி சிலை அருகே சீமான் உருவ பொம்மையை எரிக்க முயன்ற தமிழ் புலிகள் கட்சியினர் கைது.


கோவை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற 27ஆம் தேதி நடைபெற உள்ளது.அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மோகனாவை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடத்திய பிரச்சார பொதுக்கூட்டம் கடந்த 13 ஆம் தேதி திருநகர் காலனியில் நடைபெற்றது.



அதில் பேசிய சீமான், அருந்ததியர் மக்களை இழிவு படுத்தி பேசியதாக கூறி, பொள்ளாச்சி காந்தி சிலை முன்பு தமிழ் புலிகள் கட்சியினர் சீமானின் உருவ பொம்மையை கொண்டு வந்து எரிக்க முயன்றனர். அப்போது, அங்கிருந்த போலீசார் உருவபொம்மையை பிடிங்கி தடுத்து நிறுத்தினர்.



தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வேண்டும் என்றும், நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திய தமிழ் புலிகள் கட்சியினர், சீமானை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் புலிகள் கட்சியை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்து காவலர் மண்டபத்தில் அடைத்தனர். இந்த போராட்டம் காரணமாக கோவை-உடுமலை சாலை பகுதியில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...