சிரியா, துருக்கிக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்த திருப்பூர் இஸ்லாமியர்கள்!

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் திருப்பூரில் இருந்து ஆல் இந்தியா கேரளா முஸ்லிம் கல்ச்சுரல் சென்டர் மூலம் ரூ.5 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.



திருப்பூர்: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியா மக்களுக்கு உதவும் வகையில் திருப்பூரில் இருந்து 5 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் வாழ்வாதாரத்தை இழந்தும் உடமைகளை இழந்தும் தவித்து வருகின்றனர்.



இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ஆல் இந்தியா கேரளா முஸ்லிம் கல்ச்சுரல் சென்டர் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பின்னலாடை பொருட்கள் அனுப்பப்பட்டது.



திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆல் இந்தியா கேரளா முஸ்லிம் கல்ச்சுரல் சென்டர் தலைமை அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை சாபிக் அலி சிகாபுத்தங்கள் துவக்கி வைத்தார்.

இந்த நிவாரண பொருட்கள் முதல் கட்டமாக இங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு டெல்லியில் உள்ள தூதரகத்தில் ஒப்படைக்கப்படும் என்றும் இது முதல் கட்டமான நிகழ்வு என்றும் தொடர்ந்து துருக்கி, சிரியா மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை உதவி பொருட்களை அனுப்பப்படும்.

இவ்வாறு இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...