திருப்பூரில் பீகார் தொழிலாளி வெட்டிக்கொலை - ஜார்கண்ட் தொழிலாளிக்கு போலீஸ் வலை!

திருப்பூர் அருகே தனது மனைவியுடன் தொடர்பில் இருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த பனியன் தொழிலாளி பவன் யாதவ்-யை, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த உபேந்தரதாரி என்பவர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: பீகார் மாநிலத்தை சேர்ந்த பவன் யாதவ், திருப்பூர் நெசவாளர் காலனி பகுதியில் குடும்பத்துடன் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதேபோல் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த உபேந்தரதாரி, திருப்பூர் நெசவாளர் காலனி பகுதியில் குடும்பத்துடன் தங்கி, டிரைவராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், உபேந்தரதாரி மனைவி சித்ராதேவியுடன் பவன் யாதவிற்கு தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு பவன் யாதவ் வீட்டிற்கு சென்ற உபேந்தரதாரி, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.



ஒரு கட்டத்தில் ஆத்திரடைந்த உபேந்தரதாரி தான் கையில் வைத்திருந்த அரிவாளால் பவன் யாதவை தலை, கை என சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

இதில் பலத்த இரத்த காயமடைந்த பவன் யாதவை, அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பவன்யாதவ் இன்று காலை உயிரிழந்தார்.



இது குறித்து வழக்குபதிவு செய்த திருப்பூர் வடக்கு போலீசார், தப்பி சென்ற ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த உபேந்தரதாரியை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...