நீலகிரி வனத்தில் வறட்சியால் காட்டுத் தீ ஆபத்து - தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தீவிரம்

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் வறட்சி தொடங்கி உள்ளதை அடுத்து, காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 300 கிலோ மீட்டருக்கு தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.



நீலகிரி: மலை மாவட்டமான நீலகிரியில் பனிக்காலம் முடிந்து கோடை காலம் விரைவில் தொடங்க உள்ளது. இதனால், பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. வெப்பநிலை அதிகரித்து வருவதால் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள நீர் நிலைகள் வறண்டு வருகின்றன.



இதனையடுத்து காட்டுத் தீ ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய சாலைகளின் ஓரங்களிலும், வன பகுதிக்குள்ளும் 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.



குறிப்பாக, உதகையிலிருந்து முதுமலைக்கு செல்லும் கல்லட்டி மலைப்பாதை, மசினகுடி நெடுஞ்சாலை மற்றும் தொரப்பள்ளி - கக்கநல்லா தேசிய நெடுஞ்சாலை என முக்கிய சாலைகளின் இருபுறமும், மசினகுடி, சிங்கார, சீகூர், முதுமலை, தெப்பக்காடு, கார்குடி வனபகுதிக்குள்ளும் என சுமார் 300 கிலோ மீட்டருக்கு தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகிறது.



இந்த பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.



கோடைகாலத்தில் காட்டு தீ ஏற்பட்டு ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாவதை தடுக்க அமைக்கபடும் இந்த தீ தடுப்பு கோடுகளைக்கொண்டு, வன பகுதியில் பற்றி எரியும் தீ ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிக்கு பரவிச்செல்லாமல் தடுக்க உதவும் என்பதால் ஆண்டுதோறும் கோடை காலத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...