உடுமலையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் - கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம்

உடுமலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய உரிமைச் சட்டம் 2016 முறையாக அமலாக்கம் செய்ய வேண்டும், மாநில அரசு அறிவித்த 1500 ரூபாயும், கடுமையான மாற்றுத்திறனாளிகளுக்கு 2000ரூபாயும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தல்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமையாளர்களுக்கான சங்கம் சார்பில் மாவட்ட பொறுப்பாளர் மாலினி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய உரிமைச் சட்டம் 2016 முறையாக அமலாக்கம் செய்ய வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில அரசு அறிவித்த 1500 ரூபாயும், கடுமையான மாற்றுத்திறனாளிகளுக்கு 2000 ரூபாயும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், மாற்று திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.



100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு மணி நேரம் மற்றும் வேலை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க் கூட்டம் வருவாய் கோட்டாச்சியர் தலைமையில் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை நடத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் வேலை தெரிந்தவர்களுக்கு தையல் இயந்திரம் இலவசமாக வழங்க வேண்டும்.



காவல் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் புகார் மனுக்கள் மீது மாற்றுத்திறனாளிகள் சட்டப்படி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் ராஜேஷ், சிஐடியு ஜெகதீஷ், கனகராஜ், ரங்கநாதன் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...