தேசிய தாய்மொழி தினம்: கோவையில் மாவட்ட அளவிலான இலக்கியப் போட்டி!

தேசிய தாய்மொழி தினத்தையொட்டி ஒண்டிப்புதூரில் உள்ள பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்த பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளில் தலா 2 மாணவர்கள் தேர்வாகி, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் ஒண்டிப்புதூரில் தேசிய தாய்மொழி தினத்தையொட்டி நடைபெற்ற மாவட்ட அளவிலான இலக்கிய போட்டிகளில் மாணவர்கள் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர்.



ஒண்டிப்புதூர் அடுத்த எஸ்.எஸ்.குளம் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாவட்ட அளவிலான இலக்கியப் போட்டிகள் நடைபெற்றது.

இப்போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில், நடத்தப்பட்ட பேச்சுபோட்டி மற்றும் கட்டுரை போட்டிகளில் தலா 30 மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.



'கல்வியும் கல்லாமையும்' மற்றும் 'குழந்தைத் தொழிலாளி ஒழிப்பு' என்ற தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி நடத்தப்பட்ட இப்போட்டி கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.பூபதி மேற்பார்வையில் மற்ற மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

இதனிடையே, மாணவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த பேச்சுப்பேட்டியில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு மற்றும் கல்வியின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தினர்.



இதில் தேர்வுக்குழுவின் பல்வேறு கட்ட ஆய்வுக்கு பிறகு வெற்றி பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஒவ்வொரு போட்டியிலிருந்தும் 2 இறுதி போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை உச்சம்

கோவையில் கடும் வெயில் காரணமாக உக்கடம் ஒருங்கிணைந்த மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அசைவ உணவு விரு...

நீர்வளத்துறை அறிவிப்பு: கோவை மாவட்ட அணைகளில் தற்போதைய நீர் நிலை

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருப்...

தேர்தல் பணிகளுக்குப் பிறகு கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் பொதுமக்கள் வரவால் களைகட்டியது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஒரு நாள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சுற்றுலாத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று அண்டை...

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...