உடுமலை நகராட்சி சிறுவர் பூங்காவை திறக்க வேண்டும் - பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

உடுமலை நகராட்சி யுஎஸ்எஸ் காலனி பகுதியில் 20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா, பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் உள்ளது. பூங்காவை மூக விரோதிகள் மதுகுடிக்கும் இடமாக மாற்றி வருவதாக மக்கள் குற்றச்சாட்டு.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பணிகள் முடிந்து திறக்கப்படாமல் உள்ள சிறுவர் பூங்காவை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட நான்காவது வார்டு யுஎஸ்எஸ் காலனி பகுதியில் அனுஷம் நகர், பாரதியார் காலனி, மதியழகன் நகர் உட்பட பல்வேறு குடியிருப்புகளில் சுமார் 2000க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன.



பொதுமக்களின் கோரிக்கை ஏற்று இப்பகுதியில் கலைஞர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா யூ.எஸ்.எஸ் காலனி பகுதியில் அமைக்க முடிவு செய்யபட்டது. அதன்படி சிறுவர் பூங்கா பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் தற்போது வரை பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.



இதன் காரணமாக அப்பகுதி தற்போது, சமூக விரோதிகள் மதுகுடிக்கும் இடமாக மாற்றி வைத்துள்ளனர். மேலும் புதியதாக வாங்கிய விளையாட்டு உபகரணங்கள் சேதமாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.



இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு பல லட்சம் மதிப்பில் அமைக்கபட்ட சிறுவர் பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...