'சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்..!'- அதிகாரிகளுக்கு கோவை ஆட்சியர் உத்தரவு

கோவையில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்புக்குழு ஆலோசனை கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே துண்டுபிரசுரங்கள், ஒலிபெருக்கி வாயிலாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.


கோவை: சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவுறுத்தினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்புக்குழு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி, தலைமையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநகர காவல் துணை ஆணையர்கள் சந்தீஸ், பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா, வருவாய் கோட்டாட்சியர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பேசியதாவது:

சாலை விபத்துக்கள் ஏற்படாமல் தடுப்பதற்கும், உயிரிழப்புகள் ஏற்படாமல் பாதுகாப்பதற்கும் பல்வேறு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சாலை பாதுகாப்பு குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு ஓட்டுநர்களின் பொறுப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் வாகனப் பெருக்கம் அதிகரித்துக் கொண்டிருப்பதால் சாலை பாதுகாப்புப் பணியினை மேம்படுத்துவது சம்மந்தமாகவும், விபத்துகளை தடுக்கும் பொருட்டும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வாகன ஓட்டிகளுக்கு உரிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்திடும் வகையில் மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் காவல் துறையினர் உள்ளிட்டோருடன் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது.

சாலை விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க இருசக்கர வாகனம் ஓட்டும் போது தலைக்கவசமும், நான்கு சக்கர வாகனம் ஒட்டும்போது சீட்பெல்ட்டும் அணிய வேண்டும். வாகன ஓட்டுநர்கள் கைபேசி பயன்படுத்தாமல் இருப்பது, சாலை விதிமுறைகளை முழுமையாக கடைபிடிப்பது போன்றவற்றின் மூலம் விபத்துகளில் இருந்து நம்மை பாதுகாக்கலாம்.

சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே துண்டுபிரசுரங்கள், ஒலிபெருக்கி வாயிலாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். சாலைகளில் தேவையான இடங்களில் மின்னும் ஒட்டுவில்லைகள், வேகத்தடை, பாதச்சாரிகள் நடைபாதை கோடு, எச்சரிக்கை பலகைகள் ஆகியவை அமைக்கப்படவேண்டும்.

அதேபோலவே ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சாலைகளில் பழுது ஏற்பட்டிருந்தால் அவற்றை விரைவாக சரி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...