வால்பாறையில் சமுதாய வளைகாப்பு விழா - 60 கர்ப்பிணி பெண்களுக்கு தட்டு சீர்

கோவை வால்பாறையில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில், சுற்றுவட்டார எஸ்டேட் பகுதியில் உள்ள 60 மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவித்து தட்டு சீர் வழங்கப்பட்டன.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சமூக நலத்துறை சார்பாக சமுதாய வளைகாப்பு நடைபெற்றது.



வால்பாறையில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமூக நலத்துறை சார்பாக வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்தநிகழ்ச்சியில் வால்பாறை நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி மற்றும் நகராட்சி ஆணையாளர் பாலு மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதியில் உள்ள கர்ப்பிணி பெண்கள் இணைந்து இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அப்போது, அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் குழந்தை பெறும் காலங்களில் எவ்வாறு இருக்க வேண்டும் எவ்வாறு உணவருந்த வேண்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.



மேலும் அவர்களுக்கு வளையல் அணிவித்து, பொட்டு வைத்து, தட்டு சீர் வழங்கப்பட்டது.

இதில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ரதி பிரியா, திட்ட ஒழுங்கிணைப்பாளர் அனீஸ் குமார், மேற்பார்வையாளர் நாகஜோதி மற்றும் திலகவதி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...