கோரிக்கைகளை ஏற்றதால் முடிவுக்கு வந்த கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

கோவை சட்டக் கல்லூரியில் 3 மாணவர்கள் உரிய காரணம் இன்றி இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கல்லூரி நிர்வாகம் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதால் 24 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வந்த மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.


கோவை: கோவை சட்டக்கல்லூரி நிர்வாகம் மாணவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதால் மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

கோவை மருதமலை பகுதியில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் மாணவர்கள் ஷேக் முகமது மற்றும் அவரது மனைவி ஹரிதா. இந்த நிலையில், ஹரிதாவின் டிசி பிரச்சனை குறித்து கல்லூரி அலுவலர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாக வடவள்ளி காவல் நிலையத்தில் கல்லூரி நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டு இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் தரணீஸ் என்ற மாணவரும் உரிய விளக்கம் இன்றி இடைநீக்கம் செய்யப்பட்டதாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் உரிய காரணங்கள் இன்றி மூன்று மாணவர்களையும் சஸ்பெண்ட் செய்த கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து நேற்று மதியம் முதல் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இதனை காரணம் காட்டி மேற்கொண்டு எந்த மாணவர்கள் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும், இது குறித்தான விசாரணைக் குழுவில் மாணவர்கள் தரப்பில் இருந்து மாணவர்களையும் நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கையை முன் வைத்திருந்தனர்.



நேற்று இரவிலும் கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்களின் உள்ளிருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.



இந்நிலையில் இன்று காலையும் போராட்டம் நீடித்ததால் நிர்வாக காரணங்களுக்காக இன்று ஒரு நாள் பயிற்று வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக கல்லூரி நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வடவள்ளி காவல் ஆய்வாளர், ஷேக் முகமது மற்றும் ஹாரிதா மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை குறித்து மாணவர்களின் கோரிக்கையுடன் காவல்துறை சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் விரைந்து எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.



மேலும் இது குறித்தான விசாரணைக் குழுவில் மாணவர்கள் சார்பாக மாணவர் பிரதிநிதி நிச்சயமாக இடம்பெறுவார் என கல்லூரி சார்பிலும் உறுதியளிக்கப்பட்டது.

இதனை அடுத்து 24 மணி நேரம் தொடர்ந்து நடந்து வந்த போராட்டம் தற்பொழுது முடிவுக்கு வந்தது. போராட்டத்தை மாணவர்கள் கைவிட்ட நிலையில் நாளை காலை முதல் கல்லூரி வழக்கம் போல் இயங்கும் என கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...