ஊட்டி தாவரவியல் பூங்காவில் துலிப் மலர்களை ஆர்வமுடன் கண்டு ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்!

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் முதல் முறையாக வளர்க்கப்பட்டு, கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள துலிப் மலர் உள்ளிட்ட, 50 வகையான வண்ண மலர்களைச் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.



நீலகிரி: உதகை தாவர பூங்காவில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள துலிப் மலர்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.



நீலகிரி மாவட்டம் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பிரசித்தி பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவைக் காண அதிக ஆர்வம் காட்டுவது வழக்கம்.



ஆனால் தற்போது குளிர்காலம் என்பதால் பூங்கா மலர்கள் இன்றி பொலிவிழந்து காணப்படுவதால், சுற்றுலாப் பயணிகள் பூங்காவை மட்டுமே சுற்றிப் பார்த்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.



இதனையடுத்து சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசிக்க பூங்காவிற்குள் உள்ள பழமையான கண்ணாடி மாளிகையில் சிறப்பு ஏற்பாடுகளைப் பூங்கா நிர்வாகம் செய்துள்ளது.



அதாவது கண்ணாடி மாளிகைக்குள் பனியின் தாக்கம் இருக்காது என்பதாலும், குளிரிலும் பூக்கள் பாதிக்காத வகையில், 50 வகையான மலர் செடிகள் கொண்ட 25 ஆயிரம் தொட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.



அதில் வழக்கமான ரகங்களான பெட்டூனியா, காகித பூ, ஐட்ரிஜினியா, பால்சம், பிக்கோனியா, டெய்சி எனப் பல வண்ணங்களில் மலர் தொட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.



அதில் ஜம்மு காஷ்மீர் போன்ற பனிப் பிரதேசங்களிலும் மட்டுமே பூக்க கூடிய துலிப் மலர்ச் செடிகள் தாவரவியல் பூங்கா பண்ணையில் முதல் முறையாக பயிரிட்டு வெற்றி கரமாக வளர்க்கப்பட்டு பூக்கள் பூத்துள்ளதையடுத்து 4 வித துலிப் மலர் தொட்டிகளும் இடம் பெற்றுள்ளன.



சிவப்பு, மஞ்சள், வெள்ளை, பிங்க் என பூத்துள்ள துலீப் மலர்களைச் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

Newsletter

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...