கோவையில் வரும் 26 ஆம் தேதி அறிவொளி இயக்க குடும்ப விழா - அறிவொளி சுடர்கள் நூல் வெளியீடு!

கோவை சித்தாபுதூர் அரசு பள்ளியில் அறிவொளி இயக்க குடும்ப விழா வரும் 26-ம் தேதி நடக்கிறது. 1990 முதல் 97 வரை அறிவொளி இயக்கத்தில் இணைந்து பணியாற்றிய அனுபவங்களை தொகுத்து எழுதப்பட்ட அறிவொளி சுடர்கள் எனும் நூல் வெளியிடப்பட உள்ளது.


கோவை: கோவையில் வரும் 26ஆம் தேதி அறிவொளி இயக்க குடும்ப விழா நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையை சேர்ந்த அறிவொளி என்ற இயக்கம் கடந்த பல ஆண்டுகளாக கல்வி சேவையை புரிந்து வருகிறது. இந்த நிலையில் சுமார் முப்பது வருடங்களுக்கு பிறகு அறிவொளி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களின் குடும்ப விழா கோவை சித்தாபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வரும் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு கோவை பத்திரிக்கையாளர்கள் மன்ற அரங்கில் நடைபெற்றது. இதில் அறிவொளி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் சுப்ரமணியன், மோகன் தாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய அவர்கள் வருகின்ற 26ஆம் தேதி சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் அறிவொளி இயக்க குடும்ப விழா நடைபெற உள்ளது. இதில் கடந்த 1990 முதல் 97 வரை அறிவொளி இயக்கத்தில் இணைந்து பணியாற்றிய அனுபவங்களை தொகுத்து புத்தகமாக அறிவொளி சுடர்கள் எனும் நூலை வெளியிடப்பட உள்ளது.

இந்த நூலை ஓய்வு பெற்ற கூடுதல் தலைமைச் செயலாளரும் முன்னாள் கோவை மாவட்ட ஆட்சியருமான சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெளியிட உள்ளார். மேலும் விழாவில், தற்போதைய கோவை மாவட்ட ஆட்சித் தலைவர், மேயர் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது, கிருஷ்ணமூர்த்தி, அப்பாஸ் நாராயணசாமி, பால சண்முகம், உமாவதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...