உடுமலை ஏழுகுளம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை பாதுகாக்க விவசாயிகள் வலியுறுத்தல்

உடுமலையில் ஏழு குளம் பாசன திட்டத்திற்குட்பட்ட குளங்களில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது.


திருப்பூர்: உடுமலை ஏழுகுளம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி விவசாயிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை ஏழு குளம் பாசன திட்டத்திற்கு உட்பட்ட குளங்களுக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு நிரப்பப்படுகின்றன.



இந்த குளங்களை சிலர் ஆக்கிரமித்துள்ளதாகவும், அவற்றை அகற்ற வேண்டும் எனத் தமிழக அரசிற்கு விவசாயிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, ஏழு குளங்களை சுற்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதால், நீர்தேக்க பரப்பளவு படிப்படியாக குறைந்து கரைகளில் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.

பருவமழை குறைந்து விட்டதால், இந்த ஏழு குளங்களில் நிரப்பப்படும் தண்ணீரை அடிப்படையாகக் கொண்டு, கரும்பு, தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வரும் காலங்களில் ஆக்கிரமிப்பு தொடர்ந்தால், இந்தப் பகுதியில் விவசாயம் என்பது கேள்விக்குறியாகும். ஆகவே அனைத்து குளங்களிலும் பாரபட்சமில்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...