உடுமலை ஏழுகுளம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை பாதுகாக்க விவசாயிகள் வலியுறுத்தல்

உடுமலையில் ஏழு குளம் பாசன திட்டத்திற்குட்பட்ட குளங்களில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது.


திருப்பூர்: உடுமலை ஏழுகுளம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி விவசாயிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை ஏழு குளம் பாசன திட்டத்திற்கு உட்பட்ட குளங்களுக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு நிரப்பப்படுகின்றன.



இந்த குளங்களை சிலர் ஆக்கிரமித்துள்ளதாகவும், அவற்றை அகற்ற வேண்டும் எனத் தமிழக அரசிற்கு விவசாயிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, ஏழு குளங்களை சுற்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதால், நீர்தேக்க பரப்பளவு படிப்படியாக குறைந்து கரைகளில் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.

பருவமழை குறைந்து விட்டதால், இந்த ஏழு குளங்களில் நிரப்பப்படும் தண்ணீரை அடிப்படையாகக் கொண்டு, கரும்பு, தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வரும் காலங்களில் ஆக்கிரமிப்பு தொடர்ந்தால், இந்தப் பகுதியில் விவசாயம் என்பது கேள்விக்குறியாகும். ஆகவே அனைத்து குளங்களிலும் பாரபட்சமில்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...