கோவை கிராமங்களில் புகுந்த மக்னா யானை - மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கத் திட்டம்?

கோவை மாவட்டம் பொள்ளாச்சி டாப்சிலிப் வனப்பகுதியிலிருந்து வெளியேறி, குனியமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றித்திரியும் மக்னா யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணி 2வது நாளாக நீடிக்கிறது.



கோவை: தர்மபுரி மாவட்டத்தில் இருந்து பிடிக்கப்பட்டு பொள்ளாச்சி டாப்சீட் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட மக்னாயானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி நேற்று கோவை மாவட்டம் மதுக்கரை பகுதிக்கு வந்தது.

ஊருக்குள் புகுந்த யானை ஒரு வீட்டில் சுற்றுப்புற சுவரை இடித்து தள்ளியது மேலும் ஒரு வனத்துறை வாகனத்தையும் சேதப்படுத்தியது. மேலும் அங்கிருந்து பி.கே.புதூர் உள்ளிட்ட பகுதிகளில் உலா வந்த யானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

நேற்றிலிருந்து வனத்துறையினர் அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவு மதுக்கரையில் இருந்து குனியமுத்தூர் பகுதி நோக்கி வந்த யானையை 75க்கும் மேற்பட்ட வனத்துறையினர் கண்காணித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டு முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சி தொடர்கிறது.



மதுக்கரையில் இருந்து குனியமுத்தூர் பகுதிக்கு வந்த யானை, புட்டு விக்கி பாலம், நொய்யல் ஆற்று பகுதியில் சுற்றித்திரிந்து வருகிறது.



குடியிருப்பு பகுதியில் இருந்து சற்று விலகி இருக்கும் மக்னா யானை, குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.



நேற்றைய தினம் யானை இருக்கும் பகுதிக்கு வந்த மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஸ், பொதுமக்களை கட்டுப்படுத்துவதற்கு கோவை மாநகர காவல் துறையினர் பணியில் ஈடுபடுவர் என தெரிவித்திருந்ததையடுத்து யானையை விரட்டும் பணியில் வனத்துறையினரும் பொதுமக்களை கட்டுப்படுத்தும் பணியில் மாநகர காவல் துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.

வனப்பகுதிக்குள் யானையை விரட்ட முடியாதபட்சத்தில், தேவைப்பட்டால் மயக்க ஊசி செலுத்தி மக்னாவை பிடிக்கவும் வனத்துறையினர் திட்டுமிட்டு, அதற்கான ஏற்பாடுகளை செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...