கோவை கிராமங்களில் புகுந்த மக்னா யானை - மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கத் திட்டம்?

கோவை மாவட்டம் பொள்ளாச்சி டாப்சிலிப் வனப்பகுதியிலிருந்து வெளியேறி, குனியமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றித்திரியும் மக்னா யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணி 2வது நாளாக நீடிக்கிறது.



கோவை: தர்மபுரி மாவட்டத்தில் இருந்து பிடிக்கப்பட்டு பொள்ளாச்சி டாப்சீட் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட மக்னாயானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி நேற்று கோவை மாவட்டம் மதுக்கரை பகுதிக்கு வந்தது.

ஊருக்குள் புகுந்த யானை ஒரு வீட்டில் சுற்றுப்புற சுவரை இடித்து தள்ளியது மேலும் ஒரு வனத்துறை வாகனத்தையும் சேதப்படுத்தியது. மேலும் அங்கிருந்து பி.கே.புதூர் உள்ளிட்ட பகுதிகளில் உலா வந்த யானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

நேற்றிலிருந்து வனத்துறையினர் அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவு மதுக்கரையில் இருந்து குனியமுத்தூர் பகுதி நோக்கி வந்த யானையை 75க்கும் மேற்பட்ட வனத்துறையினர் கண்காணித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டு முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சி தொடர்கிறது.



மதுக்கரையில் இருந்து குனியமுத்தூர் பகுதிக்கு வந்த யானை, புட்டு விக்கி பாலம், நொய்யல் ஆற்று பகுதியில் சுற்றித்திரிந்து வருகிறது.



குடியிருப்பு பகுதியில் இருந்து சற்று விலகி இருக்கும் மக்னா யானை, குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.



நேற்றைய தினம் யானை இருக்கும் பகுதிக்கு வந்த மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஸ், பொதுமக்களை கட்டுப்படுத்துவதற்கு கோவை மாநகர காவல் துறையினர் பணியில் ஈடுபடுவர் என தெரிவித்திருந்ததையடுத்து யானையை விரட்டும் பணியில் வனத்துறையினரும் பொதுமக்களை கட்டுப்படுத்தும் பணியில் மாநகர காவல் துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.

வனப்பகுதிக்குள் யானையை விரட்ட முடியாதபட்சத்தில், தேவைப்பட்டால் மயக்க ஊசி செலுத்தி மக்னாவை பிடிக்கவும் வனத்துறையினர் திட்டுமிட்டு, அதற்கான ஏற்பாடுகளை செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...