பல்லடத்தில் குடிபோதையில் மோதல் - 2 பேருக்கு கத்திக்குத்து, ஒருவர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மதுபான கடையில் ராஜ்கமல், தர்மராஜ் மற்றும் கண்ணன் ஆகியோர் மதுகுடித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறில், இருவரையும் கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற ராஜ்கமலை போலீசார் கைது செய்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேடபாளையம் பால்காரர் காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்கமல். இவர் தனது நண்பர்கள் சிலருடன் சேடபாளையம் ஸ்டாலின் நகரில் உள்ள மதுபான கடைக்கு சென்று அனைவரும் ஒன்றாக மது அருந்தி உள்ளனர். அப்போது, போதை தலைக்கேறிய நிலையில் நண்பர்கள் உட்பட நான்கு பேரும் சாலையில் நடந்து சென்றுள்ளனர்.

அப்போது அவர்களுக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது. இதில், ஆத்திரமடைந்த ராஜ்கமல் தான் மறைத்து எடுத்துச் சென்றிருந்த கத்தியால் சக நண்பர்களான தர்மராஜ் மற்றும் கண்ணன் ஆகிய இருவரையும் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து மற்றொரு நண்பருடன் இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.



இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரையும் அப்பகுதியினர் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக ராஜ் கமலை பல்லடம் போலீசார் கைது செய்தனர். மதுபோதையில், உடன் சென்ற நண்பர்களை சக நண்பரே கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...