கோவையில் பழமையான விநாயகர் கோயில் சுவர் இடிப்பு - இந்து அமைப்பினர் கூடியதால் பரபரப்பு

கோவை பூ மார்க்கெட் அருகே சண்முகா திரையரங்கு முன்பு இருந்த விநாயகர் கோவில் சுவரை மாநகராட்சி ஊழியர்கள் இடித்த நிலையில், இதையறிந்த இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர், அங்கு வந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இடித்த சுவரை கட்டித்தர கோரிக்கை விடுத்தனர்.


கோவை: கோவை பூ மார்க்கெட் அருகே பழமையான விநாயகர் கோவில் சுவரை இடித்த மாநகராட்சி அதிகாரிகளுடன் இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கோவை பூ மார்க்கெட் அருகே சண்முகா திரையரங்கு முன்பு பழமை வாய்ந்த விநாயகர் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாநகராட்சி அதிகாரிகள் கோவிலின் சுற்று சுவரை இடித்ததாக கூறப்படுகிறது.



இதனை கேள்விப்பட்ட இந்து அமைப்பினர் மற்றும் பா.ஜ.க வினர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் இந்து அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம் இடிக்கப்பட்ட கோவில் சுவரை கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து அந்த கோவில் அரச மரத்திற்கு மஞ்சள் பூசி குங்குமம் வைத்து, இந்து அமைப்பினர் வழிபாடு நடத்தினர். ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் நெடுஞ்சாலைத்துறையினரால் அந்த கோவில் இடிக்கப்பட்ட போது, இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...