மக்னா யானை எப்படி பிடிபட்டது - ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் விளக்கம்

கோவை மாநகரில் இரண்டு நாட்களாகச் சுற்றி வந்த மக்னா யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர். இந்த யானை பிடிபட்டது தொடர்பாக ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் பார்கவ்தேஜா விளக்கமளித்துள்ளார்.



கோவை: கோவையில் சுற்றி வந்த மக்னா யானையைப் பிடித்தது குறித்து ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் பார்கவ்தேஜா விளக்கமளித்துள்ளார்.



இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, மக்னா யானை டாப்சிலிப் வனப்பகுதிகள் கடந்த பிப்ரவரி 6ம் தேதி விடுவிக்கப்பட்டதாகவும், 10 நாட்கள் வனப்பகுதிக்குள் இருந்த அந்த யானை மீண்டும் 19ஆம் தேதி அங்கிருந்து வெளியேறி விட்டது.

வனப்பகுதியிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து பொள்ளாச்சி, சேத்துமடை பகுதியிலிருந்து தற்போது வரை யானையின் நடமாடத்தை 70 முதல் 100 வனத்துறையினர் கண்காணித்து வந்து தற்போது பிடித்துள்ளதாகவும், இதில் 200 வனத்துறையினர், 100 காவல்துறையினர், கோவை, ஓசூர், சத்தியமங்கலம் பகுதியிலிருந்து வனத்துறை மருத்துவர் குழுவினர் ஈடுப்பட்டதாக தெரிவித்தார்.



மேலும் பிடிப்பட்ட இந்த மக்னா யானையின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ரேடியோ காலர் பொருத்தப்பட்டுள்ளதாகவும், யானையை வனப்பகுதியில் எங்கு விடலாம் என, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.



யானைக் கடந்து வந்த தூரத்தில் இதுவரை எவ்வித உயிர் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை எனவும், பொருட்சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சின்னதம்பி கும்கி யானை, மக்னா யானையைப் பிடிக்க மிகவும் உதவியாக இருந்தது என்றார்.



வனத்துறை மருத்துவர் சுகுமார் பேசுகையில், இந்த மக்னா யானையை பிடிக்க 4 மருத்துவக் குழுக்கள் செயல்பட்டதாகவும், மக்னா யானையைப் பிடிக்கத் தேவையான அளவிற்கு மட்டும் மயக்க மருந்து செலுத்தியதாகவும், அந்த யானைக்கு 40லிருந்து 45 வயது இருக்கும் என்றார்.

இது மக்னா என்ற போதிலும் யாரையும் தாக்காமல் அருகில் செல்பவர்களிடமிருந்து விலகித் தான் சென்றது எனத் தெரிவித்த அவர், அது அதனுடைய குணமாக இருக்கலாம் என்றார்.

மேலும் யானையை அடர் வனப்பகுதிக்குள் விடுவித்து உணவு, குடிநீர் ஆகியவை வைத்து வனப்பகுதிக்குள்ளேயே இருக்கும்படி நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்தார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...