கோவை அருகே சாலையில் கிடந்த பணம் - காவல்நிலையத்தில் ஒப்படைத்த சிறுவர்களுக்கு பாராட்டு

கோவை மாவட்டம் சின்னதடாகம் பகுதியில் சாலையில் கிடந்த பணத்தை எடுத்து காவல்நிலையத்தில் நேர்மையாக ஒப்படைத்த அரசு பள்ளி மாணவர்களான சஷ்வந்த், தர்சன், பிரனவ் ஆகியோருக்கு காவல்துறையினர் பரிசு வழங்கி கவுரவித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் சின்னதடாகத்தில் ஊராட்சி ஒன்றிய தொட்டக் கப்பள்ளி உள்ளது. கடந்த 15ந் தேதி மாலை பள்ளி நேரம் முடிந்து மாணவ - மாணவியர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, சாலையில் பணம் ரூபாய் 200 கிடந்துள்ளது.

இதை அவ்வழியாக வந்துகொண்டிருந்த மாணவர்கள் சஷ்வந்த்(வயது9) தர்சன் (வயது9) பிரனவ் மற்றும் ஆண்கள் அரசு மேல்நிலை பள்ளி மாணவர் கௌதம் ஆகியோர் பார்த்தனர். அந்தப் பணத்தை எடுத்து தடாகம் காவல் நிலையத்தில் அவர்கள் ஒப்படைத்தனர்.

சாலைலியல் கீழே கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த மாணவர்களின் நேர்மையைப் பாராட்டும் விதமாக நேற்று அவர்களை காவல் நிலையத்திற்குவரவழைத்து சப்இன்ஸ்பெக்டர் ஆறுமுக நயினார் மற்றும் காவலர்கள் சிறப்பு பரிசு வழங்கி பாராட்டினர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...