பல்லடம் அருகே மருத்துவமனை, மருந்தகத்திற்கு சீல் - மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கொடுவாய் பகுதியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த போலி மருத்துவமனை மற்றும் மருந்து கடைக்கு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் கொடுவாய் பகுதியில் அரசு அனுமதி இன்றி சட்டவிரோதமாக மருந்து கடைகள் மற்றும் மருத்துவமனைகள் செயல்பட்டு வருவதாக திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.



இதனையடுத்து, இன்று மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் கனக ராணி தலைமையிலான அதிகாரிகள் கொடுவாய் பகுதியில் திருப்பூர் - தாராபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வணிக வளாகங்களில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.



இந்த ஆய்வில் சுகம் மருத்துவமனை மற்றும் சுகம் மருந்து கடை ஆகியவை அரசு விதிமுறைகளின்படி அனுமதி ஏதும் பெறாமல் இயங்கி வந்தது ஆய்வில் தெரிய வந்தது.



இதையடுத்து, சுகம் மருத்துவமனை மற்றும் மருந்துக் கடையின் ஷட்டரை பூட்டி, பூட்டு போட்டு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...