திருப்பூரில் பாஜக மாநில துணைத் தலைவரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ரயில்வே போலீசாரை வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜை மிரட்டி, அதனை வீடியோ பதிவாக டிவிட்டரிலும் வெளியிட்ட நாராயணன் திருப்பதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு பாஜக மாநில துணைத் தலைவருக்கு எதிராக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



சென்னை - கோவை சென்ற சதாப்தி ரயிலில் கடந்த 22ஆம் தேதி பாஜகவின் மாநில துணைத்தலைவரும், செய்தி தொடர்பாளருமான நாராயணன் திருப்பதி சேலம் நோக்கி வந்துகொண்டிருந்தார். அதே ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த சக பயணி ஒருவர் செய்தித்தாள்களில் வந்த செய்தியை ஆதாரமாகக் கொண்டு பிரதமர் மோடியை விமர்சித்து வந்ததால் நாராயணன் திருப்பதி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பின் பொதுச் செயலாளருமான சாமுவேல்ராஜ், நாராயணன் திருப்பதி செயலை கண்டித்தபோது பாஜகவின் மாநில துணைத்தலைவர் மற்றும் ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் என அதிகாரத்தை பயன்படுத்தி ரயில்வே போலீசாரை வைத்து சாமுவேல்ராஜை மிரட்டியுள்ளார்.



அதனை வீடியோ பதிவாக டிவிட்டரிலும் வெளியிட்ட செயலுக்குக் கண்டனம் தெரிவித்தும் நாராயணன் திருப்பதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய அமைப்பின் நிர்வாகிகள் ஏராளமானார் கலந்து கொண்டனர்.

Newsletter

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...