உடுமலை அருகே தர்பூசணி சாகுபடி செய்த விவசாயிக்கு நேர்ந்த துயரம்

உடுமலை அருகே அரை ஏக்கரில் தர்பூசணி சாகுபடி செய்ய ரூ.25ஆயிரம் செலவு செய்து, ஒட்டுமொத்த விளைச்சலையும் விவசாயி ஒருவர் ரூ.1,000-க்கு விற்பனை செய்த அவலம் அரங்கேறியுள்ளது.


திருப்பூர்: உடுமலை அருகே அரை ஏக்கரில் தர்பூசணி சாகுபடி செய்த விவசாயி சரியான விளைச்சல் இல்லாத நிலையில் ஒட்டுமொத்தமாக ரூ. 1000-க்கு விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயி தரப்பில் கூறியதாவது, 'கடந்த காலங்களில் பருவமழைக் காலத்தில் விதைத்து விட்டு வீட்டுக்கு வந்தால் அறுவடை செய்வதற்குச் சென்றால் போதும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது குறிப்பிட்ட இடைவெளியில் உரமிடுதல் மற்றும் மருந்து தெளிக்காவிட்டால் விளைச்சல் எடுக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டு விட்டது.

அதேநேரத்தில் உரியப் பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டும் விளைச்சல் எடுக்க முடியாத அவல நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அரை ஏக்கரில் தர்பூசணி சாகுபடி செய்ய முக்கால் கிலோ விதைகள் தேவைப்படும். ஒரு கிலோ விதை ரூ.6 ஆயிரம் வரை விற்பனையாகிறது. இதுதவிர உழவு, ஆள் கூலி, உரம், பூச்சி மருந்து என அரை ஏக்கரில் ரூ.25 ஆயிரம் வரை செலவு பிடிக்கிறது.



கோடையில் நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டோம். ஆனால் காய்கள் சிறுத்து வெள்ளை பாய்ந்துள்ளதால் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. 7 டன் வரை மகசூல் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் மிகக்குறைந்த அளவிலான, தரமற்ற காய்களே கிடைத்தது.



இதனால் வயலை சுத்தம் செய்யும் நோக்கில் வெறும் ரூ.1000க்கு விற்பனை செய்தோம். இந்த நிலைக்குக் காரணம் என்ன என்பது தெரியவில்லை. தரமற்ற விதைகளா? வேறு எதுவும் வினோத நோய் தாக்குதலா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இனி தர்பூசணி சாகுபடி செய்வதைக் கைவிடுவதா அல்லது விவசாயத்தையே கைவிடுவதா என்று எண்ணுமளவுக்கு மனது சோர்வடைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...