எங்கள் பணியை வரன்முறைப்படுத்துங்கள்..! - திருப்பூர் டாஸ்மாக் ஊழியர் பேசும் வீடியோ வைரல்

அரசாங்கம் எதுவும் தருவதில்லை. எங்கள் பணியை வரன்முறைப்படுத்தினால் மட்டுமே மதுபாட்டிலுக்கு கூடுதல் தொகை வாங்குவதை நிறுத்த முடியும் என திருப்பூரை சேர்ந்த தற்காலிகம் அடிப்படையில் பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர் பேசும் வீடியோ வைரல்.



திருப்பூர்: மதுப்பாட்டில்களுக்கு கூடுதல் பணம் வாங்குவது குறித்து திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருப்பூர் அண்ணாநகரில் டாஸ்மாக் மதுபானக்கடை எண் 2312 செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த கடையில் பணி புரியும் விற்பனையாளரிடம் மதுபாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்குவது குறித்து குடிமகன் ஒருவர் கேட்டபோது, கடைக்கு வாகனத்தில் கொண்டு வந்து மதுபான பாட்டில்களை இறக்கி வைக்கும் கூலியாட்களுக்கும், பர்மிட் எழுதுபவர்களுக்கும் நாங்கள் தான் பணம் தருகிறோம்.

அரசாங்கம் எதுவும் தருவதில்லை. எங்கள் பணியை வரன்முறைப் படித்தினால் தான் அரசாங்கத்திலிருந்து தருவார்கள். அதுவரை தற்காலிகமாக பணி புரியம் நாங்கள், இதுபோன்று மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து அதிலிருந்து தான் மேற்கண்ட செலவுகளை சமாளிக்க முடியும் என்று டாஸ்மாக் விற்பனையாளர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...