கோவையிலிருந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - ஒருவர் கைது!

கோவை வேலாண்டிபாளையம் அருகே கார் மூலம் கேரளாவிற்கு கடத்தப்படவிருந்த 600 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள், ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் வேலாண்டி பாளையம் அருகே கார் மூலம் கேரளாவுக்கு கடத்த 600 கிலோ ரேஷன் அரிசியை குடிமை பொருள் வழங்கல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கோவையிலிருந்து சரக்கு வாகனங்கள், கார்கள் மற்றும் ரயில் மூலமாக கேரளாவுக்கு சட்டவிரோதமாக ரேஷன் அரிசிகள் கடத்தப்படுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் குடிமை பொருள் அதிகாரிகள் அவ்வப்போது தணிக்கையில் ஈடுபட்டு ரேஷன் அரிசிகளை பறிமுதல் செய்தும், கடத்தல் காரர்களை கைது செய்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவை மாவட்டம் வேலாண்டிபாளையம் அடுத்த மல்லேஸ்வரி நகரில், குடிமை பொருள் வழங்கல் ஆய்வாளர் மேனகா, உதவி ஆய்வாளர் ஞானசேகரன் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த மாருதி எஸ்டீம் கார் ஒன்றை தணிக்கை செய்தனர். அப்போது, காரின் பின்புறம் 12 மூட்டைகளில் 600 கிலோ எடை கொண்ட பொது விநியோக திட்ட ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.



இதனையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த மோகன் என்ற நபரை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், கடத்தி வரப்பட்ட ரேஷன் அரிசி, கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட கார் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், குறைந்த விலையில் ரேஷன் அரிசிகளை கொள்முதல் செய்து, அதிக லாபத்துடன் வட மாநில தொழிலாளர்களுக்கும், மாவு அரைக்கும் மில்களுக்கும் அரிசி சப்ளை செய்து வந்தது உறுதியானது.

இதுபோன்று சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குடிமைப் பொருள் வழங்கல் புலனாய்வு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...