கோவையில் டம்மி துப்பாக்கியை காட்டி திருநங்கைகளுக்கு மிரட்டல் - கேரள யூடியூபர்கள் மூவர் கைது!

கோவை கவுண்டம்பாளையத்தில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த திருநங்கைகளை டம்மி துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய கேரளாவை சேர்ந்த 3 யூடியூபர்களை கைது செய்த போலீசார், 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் கவுண்டம் பாளையம் அருகே டம்மி துப்பாக்கியை காட்டி திருநங்கைகளை மிரட்டிய கேரள யூடியூபர்கள் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரளா மாநிலத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் காரில் நேற்று இரவு கோவை கவுண்டம்பாளையம் பகுதிக்கு வந்துள்ளனர். அவர்கள் அந்த பகுதியில் சாலையோரம் நின்றிருந்த திருநங்கைகளை சீண்டியதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.



இதில், ஆத்திரம் அடைந்த திலீப் என்ற நபர் சினிமா சூட்டிங்கிற்கு பயன்படுத்தப்படும் பொய்யான ஏர்கன் பிஸ்டல் (ஸ்போர்ட்ஸ்) துப்பாக்கி எடுத்து திருநங்கைகளை மிரட்டியதாக தெரிகிறது.

இதை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து துடியலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் துரைராஜ், அய்யாசாமி ஆகியோர், டம்மி துப்பாக்கியை பறிமுதல் செய்து மூன்று பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.



அதில், அவர்கள் 3 பேரும் கொல்லம் திருநெல்லை பாலக்காட்டை சேர்ந்த திலீப் (33), பாலக்காடு புதூர் டெம்பிள் வீதியை சேர்ந்த கிஷோர் (23), மாங்கரையை சேர்ந்த சமீர் (30) என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் குறும்படம் எடுப்பதும் மற்றும் யூடியூப் சேனல் நடிகர்கள் என்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

கேரளாவில் இருந்து ஊட்டி செல்லும்போது இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் மீதும், பெரியநாயக்கன்பாளையம் டி எஸ்.பி மற்றும் துடியலூர் ஆய்வாளர் ஞானசேகரன் நடத்திய விசாரணைக்கு பிறகு ஆயுத தடை சட்டம், கொலை மிரட்டல் உட்பட நான்கு பிரிவில் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...