கோவை சிறுமியிடம் இன்ஸ்டாகிராமில் பழகி பாலியல் தொல்லை - இளைஞர் போக்சோவில் கைது!

கோவையில் பள்ளி சிறுமியிடம் இன்ஸ்டாகிராமில் பழகி, பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இளைஞரை, மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



கோவை: கோவை அருகே பள்ளிச்சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

கோவை சேர்ந்த 16 வயது சிறுமி, அப்பகுதியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு 2021 ஆம் ஆண்டு திருவிழா ஒன்றில் கார்த்திகேயன் என்ற இளைஞருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

பின்னர் இருவரும் இன்ஸ்டாகிராமில் பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறுமியை காதலிப்பதாக கார்த்திகேயன் தெரிவித்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, ஜூன் மாதம் சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு சென்ற கார்த்திகேயன் திருமணம் செய்து கொள்வதாக கூறிய இருவரும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்கு சென்றபொழுது சிறுமி கர்ப்பமாக இருப்பது பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து இளைஞர் கார்த்திகேயனை, போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...