தமிழக வறச்சியைப் போக்க தாகம் தீரக்கும் தாமரை யாத்திரை பா.ஜ.க. சார்பில் நடைபெறும் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கோவையில் பேட்டி.

தமிழகம் முழுவதும் வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள குளங்கள், குட்டைகள் போன்றவை தூர்வாரப்பட வேண்டும், வருங்காலத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படாமல் இருக்க நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் நீர் பிடிப்பு பகுதிகளில் மரங்களை நடுவதை கோரிக்கையாக பாரதீய ஜனதா கட்சி முன் வைத்து 10 ஆயிரம் மர கன்றுகளை 5 நாள் யாத்திரையில் நட உள்ளதாகவும், பா.ஜ.க.வின் மத்திய தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்திரராஜன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் வருகின்ற மார்ச் 10 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை மர கன்றுகள் நட யாத்திரை நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.



மேலும் சிறுவாணி அணை தூர்வாரப்படவில்லை எனவும், 40 சதவீதம் சேரும், சகதியாக உள்ளதாகவும் கேரளா அரசின் அனுமதிப்பெற்று  அதற்கு நிதியை தமிழக அரசு ஒதுக்கி உடனடியாக தூர்வாரப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். கேரளாவில் உள்ளது போல் தமிழகத்திலும் நீர் நிலைகளை தூர்வாரி மழை காலங்களில் தண்ணீர் சேமித்து வைக்க நீர் சாரணலாம் அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். கோவை மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் நடைபெற்ற பேட்டியின் போது கோட்ட பொறுப்பாளர் ஜி.கே.செல்வகுமார், மாநில செயலாளர் நந்தகுமார், மாவட்ட தலைவர் நந்தகுமார் மற்றும கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...