கோவையில் ஏப்ரல் 8ஆம் தேதி சங்கர் மகாதேவன் இசை நிகழ்ச்சி - ஆன்லைனில் டிக்கெட் விற்பனை துவக்கம்!

கோவை எஸ்.எஸ்.குளம் பகுதியில் உள்ள ஆதித்யா கல்லூரி மைதானத்தில் வரும் ஏப்ரல் 8ஆம் தேதி மாலை 6 மணிக்கு பிரபல பாடகர் சங்கர் மகாதேவன் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது, இதற்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் துவங்கியுள்ளது.


கோவை: கோவையில் வரும் எப்ரல் 8ஆம் தேதி நடைபெறவுள்ள பிரபல பாடகர் சங்கர் மகாதேவன் இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை துவங்கியுள்ளது.

கோவை எஸ்.எஸ்.குளம் பகுதியில் உள்ள ஆதித்யா தனியார் கல்லூரி மைதானத்தில் ஏப்ரல் 8ம் தேதி பிரபல பாடகர் சங்கர் மகாதேவனின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி குறித்தான செய்தியாளர் சந்திப்பு ஆதித்யா கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

இதில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான மௌனராகம் முரளி கூறியதாவது

ஏப்ரல் 8ம் தேதி மாலை ஆறு மணிக்கு நடைபெற உள்ள இந்த இசை நிகழ்ச்சியில் பிரபல பாடகர் சங்கர் மகாதேவன் பங்கேற்க உள்ளார்.

இந்நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் டிக்கெட் புக்கிங் தளங்களான Bookmyshow உள்பட பல்வேறு தளங்களில் துவங்கி உள்ளது. டிக்கெட்டின் விலை 500 முதல் 2000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் உட்பட யார் மொத்தமாக புக்கிங் செய்தாலும் சிறப்புச் சலுகை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோவையில் முதல் முறையாக நடைபெறவுள்ள சங்கர் மகாதேவனின் இசை நிகழ்ச்சியில் சுமார் 15,000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதிலிருந்து பெறப்படும் தொகையில் ஒரு பகுதியை இசைக்கலைஞர்கள் நலனுக்காக வழங்கப்பட உள்ளது.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...