தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமனம் - பிரதமர் மோடிக்கு குஷ்பு நன்றி!

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள குஷ்பு, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் குஷ்பு-வுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



சென்னை: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நடிகை குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார்.

நடிகை குஷ்பு பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார்.



இந்நிலையில், தற்போது, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பாஜகவினர் மற்றும் திரைத்துறையினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



இதுதொடர்பாக குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், இவ்வளவு பெரிய பொறுப்பை எனக்கு வழங்கிய பிரதமர் மோடிக்கும், இந்திய அரசாங்கத்திற்கும் எனது நன்றிகள். பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க என்னால் முடிந்ததை செய்வேன், என்று குறிப்பிட்டுள்ளார்.



பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பதிவில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட குஷ்புவுக்கு தமிழக பாஜக சார்பில் வாழ்த்துகள். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமையை எதிர்த்து தொடர்ந்து போராடிய குஷ்புவுக்கு கிடைத்த அங்கீகாரம் என்று பாராட்டியுள்ளார்.



கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், பாஜக மகளிரணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் தனது டுவிட்டர் பதிவில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள குஷ்புவுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் பெண்களின் நலன்களை ஊக்குவிப்பீர்கள், பாதுகாப்பீர்கள் மற்றும் இந்த பொறுப்பில் முக்கிய பங்கு வகிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த புதிய பொறுப்புக்கு எனது வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...