இரட்டைக்குவளை முறையை தடுக்க வேண்டும்..! - கிணத்துக்கடவில் விசிக ஆர்ப்பாட்டம்

கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற விசிக கட்சியின் ஆர்ப்பாட்டத்தில், இரட்டை குவளை முறையை ஒழிக்கவும், பட்டியலின மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கவும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.



கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே பட்டியலின மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிணத்துக்கடவு வட்டார பகுதியில் வசிக்கும் பட்டியலின தாழ்த்தப்பட்ட ஏழை, எளிய மக்கள் வீட்டு மனை பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், இதுவரை அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்ல என கூறப்படுகிறது.



இந்நிலையில் வீட்டு மனை பட்டா வழங்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், இரட்டைக் குவளை முறையை தடுத்து நிறுத்தவும், தென்னை சார்ந்த தொழில்காளர்களுக்கு நல வாரியம் அமைக்க வலியுறுத்தியும் கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை மாவட்ட துணை செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, கோரிக்கையை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில், விசிகவின் மாநில துணை பொதுச் செயலாளர் கனியமுதன், மாவட்ட செயலாளர் சுசி கலையரசன், தெற்கு மாவட்ட செயலாளர்கள் பிரபு, சிவகாமி, விடுதலைச் செல்வன், முகமது அலி உள்ளிட்ட விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...