உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் அதிகரித்துள்ள ஆக்கிரமிப்பு - பயணிகள் அவதி!

உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள நடைபாதை மற்றும் பயணிகள் அமரும் இடங்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைத்துள்ளதால் பயணிகள் அமர்வதற்கு இடமின்றி அவதிக்குள்ளாகி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


திருப்பூர்: உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பால் சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையத்துக்கு தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன. சுற்றுவட்டார கிராமங்களுக்கும், பழநி, பொள்ளாச்சி, திருப்பூர், தாராபுரம், பல்லடம் மற்றும் தென் மாவட்டங்களுக்கும் உடுமலை வழியாகப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதேபோல் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் உடுமலை பேருந்து நிலையத்துக்கு வருகின்றனர். பேருந்து நிலையத்தில் 5 வழிகள் உள்ளன. இங்குள்ள வணிக வளாகத்தில், பயணிகள் அமரும் இடத்தை பலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். இதனால் பயணிகள் ஒதுங்க இடமின்றி சிரமப்படுகின்றனர்.

தட்டிக்கேட்கும் பயணிகளை கடைக்காரர்கள் மிரட்டி வருகின்றனர். எனவே, பயணிகளுக்கு இடையூறாக செயல்படும் கடைக்காரர்கள் மீது நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...