உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் அதிகரித்துள்ள ஆக்கிரமிப்பு - பயணிகள் அவதி!

உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள நடைபாதை மற்றும் பயணிகள் அமரும் இடங்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைத்துள்ளதால் பயணிகள் அமர்வதற்கு இடமின்றி அவதிக்குள்ளாகி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


திருப்பூர்: உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பால் சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையத்துக்கு தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன. சுற்றுவட்டார கிராமங்களுக்கும், பழநி, பொள்ளாச்சி, திருப்பூர், தாராபுரம், பல்லடம் மற்றும் தென் மாவட்டங்களுக்கும் உடுமலை வழியாகப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதேபோல் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் உடுமலை பேருந்து நிலையத்துக்கு வருகின்றனர். பேருந்து நிலையத்தில் 5 வழிகள் உள்ளன. இங்குள்ள வணிக வளாகத்தில், பயணிகள் அமரும் இடத்தை பலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். இதனால் பயணிகள் ஒதுங்க இடமின்றி சிரமப்படுகின்றனர்.

தட்டிக்கேட்கும் பயணிகளை கடைக்காரர்கள் மிரட்டி வருகின்றனர். எனவே, பயணிகளுக்கு இடையூறாக செயல்படும் கடைக்காரர்கள் மீது நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...