சட்டை கிழிந்த நிலையில் அவையைவிட்டு வெளியேறிய திமுக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் தாக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. சட்டை கிழிந்த நிலையில் அவையைவிட்டு வெளியே வந்த திமுக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.



தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எதிரணியில் அமளியில் ஈடுபட்டதோடு, சபாநாயகரின் நாற்காலி, மைக்கை உடைத்தனர். அப்போது, தி.மு.க உறுப்பினர் பூங்கோதை, மேஜையின் மீது ஏறி கோஷமிட்டார். இதற்கு திமுக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்டார். இதையடுத்து சபாநாயகர் தி.மு.க எம்,எல்,ஏக்களை சட்டமன்றத்தில் இருந்து வெளியேற உத்தரவுவிட்டார். இந்நிலையில் திமுக எம்,எல்,ஏக்களை அவைக்காவலர்கள் குண்டுகட்டாக வெளியேற்றினர். இதனை தொடர்ந்து திமுக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறவழிப் போராட்டத்தை மேற்கொண்டார்.  சட்டப்பேரவைக்குள் தரையில் அமர்ந்து மு.க.ஸ்டாலினுடன் திமுக உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டபோது 20 திமுக உறுப்பினர்கள் உள்பட எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் மீது அவைக்காவலர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், சட்டை கிழிந்த நிலையில் அவையைவிட்டு வெளியே வந்த திமுக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். சட்டமன்றத்தில் நடந்ததை விளக்கினார். தற்போது திமுக உறுப்பினர்கள் கவர்னரை சந்திக்க செல்வதாகவும் அவர் கூறினார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...