கோவை சிறுமுகை வனப்பகுதியில் இறந்து கிடந்த ஆண் யானை - வனத்துறை விசாரணை!

சிறுமுகை அடுத்த பெத்திக்குட்டை வனப்பகுதியில் 5 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று இறந்து கிடந்த நிலையில், வனத்துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள் குழுவினருடன் யானையின் இறப்புக்கான காரணத்தை கண்டறிய, உடற்கூறாய்வு பரிசோதனை மேற்கொண்டனர்.


கோவை: கோவை சிறுமுகை அருகே காப்புக்காட்டில் இறந்த நிலையில் ஆண் யானையின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமுகை வனச்சரகத்துக்கு உட்பட்ட மோதூர் பெத்திக்குட்டை காப்புகாடு வனப்பகுதிக்குள் வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது கருப்பராயன் கோவில் அருகேயுள்ள வனப்பகுதியில் 5 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கால்நடை மருத்துவர் குழுவுடன் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இதனையடுத்து, யானையில் உடலை வன அதிகாரிகளும் கால்நடை மருத்துவர்களும் ஆய்வு செய்தனர்.

இதனிடையே யானையின் உடலில் எந்த காயங்களும் இல்லாததால், யானை எப்படி இறந்தது என்பதை கண்டு பிடிப்பதற்காக இன்று உடற்கூறாய்வு பரிசோதனை நடைபெற்றது. இந்நிலையில், பரிசோதனையின் முடிவில் தான் யானை இறந்ததற்கான காரணம் தெரியவரும் என வன அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...