தாராபுரம் அருகே ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.16.8 லட்சத்துக்கு மக்காச்சோளம் விற்பனை!

தாராபுரம் அடுத்த அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கொண்டு வந்த மக்காச்சோளம் ரூ.16.8 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.16.8 லட்சத்துக்கு மக்காச்சோளம் விற்பனை செய்யப்பட்டது.

தாராபுரத்தை அடுத்த அலங்கியம் பகுதியில் திருப்பூர் விற்பனை குழுவின், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மக்காச்சோளத்திற்கான மறைமுக ஏலம் நடைபெற்றது.

இதற்காக திருப்பூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு, 75,729 கிலோ அளவிலான மக்காச்சோளத்தை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இந்த ஏலத்தில், திருப்பூர் திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது அதிகபட்சமாக குவிண்டால் ஒன்று ரூ.2,265க்கும் குறைந்தபட்சமாக ரூ.2,187 க்கும் விலை போனது. அதன் மூலம் மொத்தமாக ரூ. 16,82,077-க்கு மக்காச்சோளம் விற்பனை செய்யப்பட்டது.

ஏலத்திற்கான ஏற்பாடுகளை மேற்பார்வையாளர் அருள்குமார் செய்திருந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...