கோவை வேளாண் பல்கலையில் வேளாண் தொழில்‌ நிறுவுவதற்கான பயிற்சி வகுப்பு

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில்‌ இரண்டு நாட்கள் நடைபெற்ற தொழில்‌ முனைவோருக்கு வேளாண் தொழில்‌ நிறுவுவதற்கான பயிற்சி வகுப்பு நிறைவு பெற்றது. இந்த பயிற்சியில் வேளாண் சார்ந்த துறைகளிலிருந்து 30 தொழில்‌முனைவோர்கள்‌ பங்கு பெற்றனர்‌.


கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில்‌ இரண்டு நாட்கள் நடைபெற்ற தொழில்‌ முனைவோருக்கு வேளாண் தொழில்‌ நிறுவுவதற்கான பயிற்சி வகுப்பு நிறைவு பெற்றது.

வேளாண் விற்பனை மற்றும்‌ வணிகத்துறை, தமிழ்நாடு நீர் பாசன வேளாண்மை நவீனமயமாக்கல்‌ திட்டத்தின்‌ கீழ்‌ தொழில்‌ முனைவோருக்கு வேளாண் தொழில்‌ நிறுவுவதற்கான பயிற்சி தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்திலுள்ள தொழில்‌ நுட்ப வணிக காப்பகம்‌, வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில்‌ இரண்டு நாட்கள்(27,28ஆம் தேதி) நடைபெற்றது.

முனைவர்‌ சோமசுந்தரம்‌, இயக்குநர்‌, வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககம் பயிற்சியைத் துவக்கி வைத்து வேளாண்‌ வணிகத்திற்கான வாய்ப்புகள் குறித்து விரிவுரை வழங்கினார்‌. ஞானசம்பந்தம்‌, தலைமை செயல்‌ அதிகாரி, தொழில்‌ நுட்ப வணிக காப்பகம்‌ வரவேற்றார். முனைவர்‌ மலர்கொடி இணைப்‌ பேராசிரியர்‌, விவசாய மற்றும்‌ கிராமப்புற மேலாண்மை நன்றியுரை ஆற்றினார்‌.



வேளாண் மற்றும்‌ வேளாண் சார்ந்த துறைகளிலிருந்து 30 தொழில்‌ முனைவோர்கள்‌ இப்பயிற்சியில்‌ பங்கு பெற்றனர்‌. வணிகத்திட்டம்‌ தயாரித்தல்‌, வணிகத்திற்கான செலவு பகுப்பாய்வு, முதலீட்டுத்திட்டம்‌, தொழில்‌ நுட்ப வணிக காப்பகத்தின்‌ செயல்பாடுகள், வணிகம்‌ சார்ந்த சேவைகள்‌, உணவு பதப்படுத்துதல்‌ மற்றும்‌ மதிப்புக்கூட்டல்‌ போன்ற தலைப்புகளை மையமாகக்‌ கொண்டு இப்பயிற்சியானது நடைபெற்றது.

தொழில்‌ நுட்ப வணிக காப்பகத்தின்‌ தொழில்‌ முனைவோர்கள்‌ தங்களின்‌ தொழில்‌ முனைவோர்‌ பயணத்தைப் பயிற்சியாளர்களிடம்‌ பகிர்ந்து கொண்டனர்‌. இப்பயிற்சிக்குப் பின்‌ இறுதியில்‌ தோந்தெடுக்கப்பட்ட பயிற்சியாளர்களுக்கு ரூ.5 லட்சம்‌ வரையிலான கடனுதவியும்‌, ரூ.2லட்சம்‌ வரையிலான மானியமும்‌, இத்திட்டத்தின்‌ கீழ்‌ வழங்கப்படும்‌. மேலும்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌, இவ்வகை பயிற்சியானது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்‌ தொழில்‌ நுட்ப உதவியுடன்‌ தமிழ்நாடு முழுவதும்‌ நடத்தப்பட உள்ளது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...