கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை - புகைப்பட கலைஞர் கைது

கோவை க.க.சாவடி அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த புகைப்பட கலைஞரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த 1,100 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.



கோவை: கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த புகைப்பட கலைஞரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையைத் தடுக்க மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை க.க.சாவடி அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை நடப்பதாக க.க.சாவடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி ஆய்வாளர் உதயசந்திரன் தலைமையிலான போலீசார், க.க.சாவடி அருகே உள்ள நவக்கரை பகுதியில் ரோந்துச் சென்றனர்.

அப்போது அங்குச் சாலையில் சந்தேகத்திற்கிடமாக கல்லூரி மாணவர்களுடன் பேசிக்கொண்டிருந்த இளைஞரைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.



விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்த கனேசன் மகன் அருண்பிரசாத் (29) என்பதும், இவர் புகைப்பட கலைஞராக பணியாற்றிக் கொண்டு, வட மாநிலங்களிலிருந்து கஞ்சாவை ரயில் மூலம் வாங்கி வந்து, அதை கேரளாவிலும், எல்லையில் உள்ள கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு அதிக லாபத்தில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 1.100 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...