கோவை வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் கடும் பனிமூட்டம் - வாகன ஓட்டிகள் அவதி!

கோவை மாவட்டம் வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் இன்று அதிகாலை முதல் கடுமையான பனிமூட்டம் நிலவியதால், எதிரில் வரும் வாகனங்கள் தெரியாததால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே வாகங்களை இயக்கி சென்றனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் கடுமையான பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.



வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் இன்று அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. வால்பாறை பகுதியில் சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், இன்று காலை பனிமூட்டம் காணப்பட்டது.



இதில் பொள்ளாச்சி செல்லும் வழியில் கவர்கல், சக்தி, தலனார், வாட்டர் பால்ஷ், அட்டகட்டி போன்ற எஸ்டேட் பகுதிகளில் அதிக பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் வால்பாறையில் - பொள்ளாச்சி இடையே செல்லும் வாகனங்கள், எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே இயக்கி சென்றனர்.



பனிமூட்டம் காணப்படும் நிலையில், இருசக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்லுவதால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் மலைப் பகுதிகளில் செல்லும் வாகனங்கள் வேககட்டுப்பாடுடன் செல்லவும், இருசக்கர வாகனங்கள் மெதுவாகவும் கவனமாகவும் செல்லும்படி வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...