கோவை வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் கடும் பனிமூட்டம் - வாகன ஓட்டிகள் அவதி!

கோவை மாவட்டம் வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் இன்று அதிகாலை முதல் கடுமையான பனிமூட்டம் நிலவியதால், எதிரில் வரும் வாகனங்கள் தெரியாததால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே வாகங்களை இயக்கி சென்றனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் கடுமையான பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.



வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் இன்று அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. வால்பாறை பகுதியில் சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், இன்று காலை பனிமூட்டம் காணப்பட்டது.



இதில் பொள்ளாச்சி செல்லும் வழியில் கவர்கல், சக்தி, தலனார், வாட்டர் பால்ஷ், அட்டகட்டி போன்ற எஸ்டேட் பகுதிகளில் அதிக பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் வால்பாறையில் - பொள்ளாச்சி இடையே செல்லும் வாகனங்கள், எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே இயக்கி சென்றனர்.



பனிமூட்டம் காணப்படும் நிலையில், இருசக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்லுவதால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் மலைப் பகுதிகளில் செல்லும் வாகனங்கள் வேககட்டுப்பாடுடன் செல்லவும், இருசக்கர வாகனங்கள் மெதுவாகவும் கவனமாகவும் செல்லும்படி வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...