கோவையில் கஞ்சா விற்பனை செய்த 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது - தனிப்படை போலீசார் அதிரடி!

கோவை ரத்தினபுரியில் சூரிய பிரகாஷ், மோனிஷா ஆகியோரின் வீடுகளில் இருந்து 1 கிலோ 950 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கார், இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, இவர்கள் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.



கோவை: கோவையில் போதை பொருள் புழக்கத்தை தடுக்கவும் கஞ்சா விற்பனையை ஒடுக்கவும் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையிலும் தணிக்கையிலும் ஈடுபட்டுவருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, ரத்தினபுரி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் மீனா குமாரி, சப் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் உள்ளிட்ட போலீசார் அடங்கிய தனிப்படை வாகனங்களிலும் வீடுகளிலும் தீவிர தணிக்கையில் ஈடுபட்டது.

அப்போது சூரிய பிரகாஷ் என்ற இளைஞரின் வீட்டில் தணிக்கை செய்தபோது, 450 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய பிரகாசை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், சிலர் கஞ்சா விற்பது தெரியவந்தது.



அதன் அடிப்படையில், மோனிஷா என்ற இல்லத்தரசி பெண் வீட்டில் போலீசார் தணிக்கை செய்தபோது, ஒரு கிலோ 500 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோன்று தேவி ஸ்ரீ, பியூட்டிசியன் பத்மா உள்ளிட்டோரும் கஞ்சா வளர்க்கக்கூடிய நபர்களுக்கு கஞ்சா விற்கும் நபர்களாக இருந்தது தெரியவந்தது. உடனடியாக நான்கு பேரையும் கைது செய்த தனிப்படை போலீசார் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர்.

விசாரணை அடிப்படையில் இவர்களுக்கு மேலே உள்ள தலைவன் கஞ்சா பிரியர்களிடம், இவர்களின் முகவரியை தெரிவித்து வீடுகளுக்கே வந்து கஞ்சாவை வாங்கிச் சென்றது தெரியவந்தது.



நான்கு பேரிடமிருந்தும் 1 கிலோ 950 கிராம் கஞ்சா பாக்கெட்டுகள், கார், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றையும் தனிப்படையினர் பறிமுதல் செய்தனர். இடைத்தரகர்கள் போல செயல்பட்டு வந்த இவர்களின் பின்னணியில் உள்ள கஞ்சா வியாபாரிகளின் தலைவனை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

Newsletter

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...

கோடைக்காலம்: Pothannur வழித்தடத்தில் Mangaluru-Chennai சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு Karnataka மாநிலம் Mangaluru-இல் இருந்து Chennai Egmore-க்கு Pothannur வழித்தடத்தில் சிறப்பு ரயி...

கோவை விமான நிலையம் 5.15 சதவீதம் வளர்ச்சியுடன் புதிய சாதனை படைப்பு

கோவை சர்வதேச விமான நிலையம் 2025-26 நிதியாண்டில் 5.15 சதவீதம் வளர்ச்சி பதிவு செய்துள்ளது. இந்த காலத்தில் மொத்தம் 34,20,74...

கோவை விமான நிலையம் 5.15% வளர்ச்சியுடன் புதிய சாதனை படைப்பு

கோவை சர்வதேச விமான நிலையம் 2025-26 நிதியாண்டில் 5.15% வளர்ச்சி பதிவு செய்துள்ளது. இந்த காலத்தில் மொத்தம் 34,20,745 பேர்...

கோவை: திமுக கவுன்சிலர்கள் இருவர் அதிமுகவில் இணைந்தனர்; CPI கவுன்சிலர் ராஜினாமா

கோயம்புத்தூரில் திமுகவைச் சேர்ந்த இரு மாநகராட்சி உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்த நிலையில், சிபிஐ கவுன்சிலர் ஒருவர் கட்சி...

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...