கிணத்துக்கடவு மக்கள் தொடர்பு முகாம் - ரூ.1.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

கோவை கிணத்துக்கடவு அருகேயுள்ள கக்கடவு பகுதியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், வருவாய்த்துறை, வேளாண்மை துறை, தோட்ட கலைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 314 பயனாளிகளுக்கு ரூ.1.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், ரூ.1.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கிணத்துக்கடவு அருகே உள்ள கக்கடவு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு மாவட்ட வருவாய் அலுவலரின் மக்கள் தொடர்பு முகாம் இன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா முன்னிலை வகித்தார்.



இந்த நிகழ்வில், கிணத்துக்கடவு வட்டாட்சியர் மல்லிகா அனைவரையும் வரவேற்று பேசினார். இந்த முகாமில் கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



இந்த முகாமில் வருவாய்த்துறை, வேளாண்மை துறை, தோட்ட கலைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 314 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 55 லட்சத்தில் 60 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் மாவட்ட வருவாய் அலுவலரிடம், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.

இந்த மக்கள் தொடர்பு முகாமில் கக்கடவு ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன், துணை வட்டாட்சியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...