கோவை அருகே விவசாய தோட்டத்தில் புகுந்து கால்நடைகளை திருட முயன்ற கும்பல் - ஒருவர் கைது

கோவை மதுக்கரை அரிசிபாளையம் அருகே ராமலிங்கம் என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்து ஆடு, கோழிகளை திருட முயன்ற கார்த்திக் என்பவரை மதுக்கரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய சரவணன், ரமேஷ் என இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை அரிசிபாளையம், மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்த ராமலிங்கம் (வயது55) அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். கடந்த திங்கட்கிழமை இரவு இவர் வழக்கம்போல பணிகளை முடித்து விட்டு தூங்கச் சென்றார்.

அப்போது, நள்ளிரவு மூன்று மணியளவில் நாய் குறைக்கும் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது, தோட்டத்திற்குள் புகுந்த மூன்று மர்ம நபர்கள் அங்கிருந்த ஆடு மற்றும் கோழிகளை திருட முயன்றதாக தெரிகிறது.

இதையடுத்து ராமலிங்கம் சத்தம் போட்டதால் அங்கிருந்த சக விவசாயிகள், பொதுமக்கள் சுற்றி வலைத்து மூன்று பேரையும் பிடிக்க முயன்றனர். ஆனால், ஒருவர் மட்டுமே சிக்கினார்.



இதையடுத்து அவரை மதுக்கரை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர்கள் நெகமத்தை சேர்ந்த கார்த்திக் (வயது28), என்பதும் அவருடன் குனியமுத்தூரை சேர்ந்த சரவணன் (வயது27) மற்றும் அறிவொளிநகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது22) ஆகியார் வந்ததும் தெரியவந்தது.

மேலும், குடி போதையில் இரு சக்கர வாகனத்தில் வந்த அவர்கள், ராமலிங்கம் வீட்டில் வைத்திருந்த ஆடுகளை திருட முயன்றதும் உறுதிப்படுத்தப்பட்டது. அத்தோடு, 3 பேர் மீதும் செல்வபுரம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு நிலுவையில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, பிடிபட்ட கார்த்திக்கை காவல்துறையினர் கைது செய்து, தப்பியோடி இருவரையும் தேடிவருகின்றனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...