தண்டவாளத்தில் 'வாக்கிங்' போன மக்னா யானை - நொடிப் பொழுதில் உயிர் தப்பிய வைரல் வீடியோ

கோவை மதுக்கரை அருகே தண்டவாளத்தில் மக்னா யானை ஏறி நின்றபோது, அந்நேரத்தில் ரயில் வேகமாக வந்துவிடவே சாதுரியமாக செயல்பட்டு வனத்துறையினர் விரட்டினர். உடனடியாக தண்டவாளத்தை விட்டு இறங்கி யானை உயிர் தப்பிய வீடியோ, சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


கோவை: தர்மபுரி மாவட்டத்தில் இருந்து மக்னா யானை கடந்த ஆறாம் தேதி பிடிக்கப்பட்டு கோவை வனச்சரகத்தில் உள்ள வரகளியாறு பகுதியில் விடப்பட்டது.

இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி யானை வனத்தை விட்டு வெளியேறி பொள்ளாச்சி ஆனைமலை, புரவிபாளையம், கிணத்துக்கடவு வழியாக மதுக்கரை பகுதியில் சுற்றித்திரிந்தது.

கடந்த 21-ம் தேதி காலை யானை மதுக்கரை அருகே வாழைத் தோட்டத்தை கடந்து அருகில் இருந்த ரயில் தண்டவாளத்தில் மக்னா யானை ஏறி நின்றது.

அப்போது எதிர்பாராத விதமாக ரயில் வந்துவிடவே சாதுரியமாக செயல்பட்ட வனத்துறையினர், நொடிப்பொழுதில் மக்னா யானையை விரட்டினர்.



உடனடியாக தண்டவாளத்தை விட்டு இறங்கியதில் வேகமாக சென்ற ரயில் தண்டவாளத்தைக் கடந்து சென்றது.

மக்னா யானை ரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருப்பதும், திடீரென ரயில் வந்தபோது சாதுர்யமாக செயல்பட்டு வனத்துறையினர் அதை விரட்டி அடித்த காட்சிகளும் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவிவருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...