ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்கு எண்ணிக்கை - காங்கிரஸ், திமுக தொண்டர்கள் கொண்டாட்டம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருவதால் திமுக கூட்டணி கட்சி தொண்டர்கள் வெற்றிக் கொண்டாடட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.


ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து, இந்தத் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் கடந்த 27ம் தேதி நடைபெற்றது.

75% வாக்குப்பதிவு பதிவான நிலையில், சித்தோடு அருகே உள்ள அரசினர் பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.



காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் தபால் வாக்கு எண்ணப்பட்டு, வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகிய வாக்குகள் எண்ணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ வி கே எஸ் இளங்கோவன் தொடர்ந்து தபால் வாக்கு மற்றும் முதல் சுற்று இரண்டாம் சுற்று அடிப்படையில் முன்னிலை வகுத்து வருகிறார்.

இரண்டாம் சுற்று நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் இ வி கே எஸ் இளங்கோவன் 23 ஆயிரத்து 321 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் கே எஸ் தென்னரசு 8124 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 1498 வாக்குகளும், தேமுதிக 184 வாக்குகளும் பெற்றுள்ளனர்.



ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் இருந்துவருவதால், வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே சேலம் முதல் கோவை வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் குவிய தொடங்கியுள்ளனர்.



மேலும், பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் பேருந்துகளில் பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கியும் தங்களது வெற்றி கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர். மேலும், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இ வி கே எஸ் இளங்கோவனுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து துண்டுப்பிரசுரமும் அச்சிடப்பட்டு திமுகவினர் சார்பில் பொதுமக்களிடம் வழங்கி வருகின்றனர். வாக்கு எண்ணிக்கை மற்றும் வெற்றிக் கொண்டாட்டங்களால் ஈரோடு கிழக்குத் தொகுதி பரபரப்புடன் காணப்படுகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...