மனைவி, மாமியாரை விஷ ஊசி செலுத்தி கொலை செய்ய முயற்சி - அன்னூரில் கணவர், காதலி உட்பட 3 பேர் கைது!

மாமியார் மற்றும் மனைவி கீர்த்தனாவை விஷ ஊசி போட்டு கொலை செய்ய முயன்ற கணவர் ஸ்ரீதரன், அவருக்கு உடந்தையாக இருந்த காதலி ரம்யா, நண்பர் பழனி ஆகியோரை அன்னூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: மதுரை சேர்ந்தவர் ஸ்ரீதரன் (வயது27) கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை கேட்டரிங் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவருடன் பணிபுரியும் ரம்யா (வயது 27) அவரது நண்பர் பழனி (வயது 25) ஆகிய 3 பேரும் சேர்ந்து மனைவி கீர்த்தனாவையும், அவரது தாயார் கீதாலட்சுமியையும் விஷ ஊசி போட்டு கொல்ல முயற்சித்துள்ளார்.



இது குறித்து கீர்த்தனா அன்னூர் போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில், ஸ்ரீதரன் கைது செய்யப்பட்டு மேட்டுப்பாளையம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அன்னூர் போலீசார் ரம்யா மற்றும் பழனியை தேடி வந்தனர். இந்நிலையில், சின்னியம்பாளையம் அருகே ஆர்ஜி புதூரில் ரம்யாவும், பழனியும் பிடிபட்டனர். இருவரையும் கைது செய்து அன்னூர் அழைத்து வந்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரம்யா, பழனியை காதலித்து வந்ததாகவும், அதன் பிறகு ஸ்ரீதருடன் பழக்கம் ஏற்பட்டு, ஒரு மாதத்திற்கு முன்பு ஸ்ரீதரை திருமணம் செய்து கொண்டதாகக் கூறினார். இந்நிலையில் கீர்த்தனாவை கொலை செய்வதற்காக கீர்த்தனாவுக்கு விஷ ஊசியும், கீர்த்தனாவின் தாயார் கீதாலட்சுமிக்கு மயக்க ஊசியும் போட்டோம்.

கீர்த்தனாவிற்கு வலிப்பு ஏற்பட்டது. ஆனால் கீதாலட்சுமிக்கு மயக்கம் ஏற்படாமல், தன் மகளுக்கு வலிப்பு ஏற்பட்டது நேரில் பார்த்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க கூறினார். நாங்கள் வேறு வழியின்றி இருவரையும் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தோம் என்று கூறினர்.

இதையடுத்து, அன்னூர் போலீசார் ரம்யாவையும், பழனியையும் கொலை முயற்சி உட்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், செல்போன் மூலம் கீர்த்தனாவிற்கு கொலை மிரட்டல் விடுத்த நபரையும் போலீசார் தேடி வருகின்றனர். மனைவியை விஷ ஊசி போட்டு கொல்ல முயன்ற கணவனுக்கு உடந்தையாக இருந்த காதலியும், நண்பனும் கைது செய்யப்பட்ட சம்பவம் அன்னூர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...