கோவை அருகே ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் பறிமுதல் - சட்டவிரோத கும்பல் கைது!

கோவை காரமடை அருகே பழைய கட்டிடங்களை தகர்ப்பதற்கு வைத்திருந்த 622 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 350 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்து, திருச்சூரை சேர்ந்த தினேஷ், திருவாரூரை சேர்ந்த செந்தில்குமார், காரமடையை சேர்ந்த சுரேஷ்குமார் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் காரமடை அருகே ஆய்வாளர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் தலைமை காவலர் சிவப்பிரகாஷ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கண்ணார்பாளையம் பிரிவு சுடுகாடு அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் இரண்டு இருசக்கர வாகனங்களில் சிலர் நின்றுகொண்டிருந்தனர்.



அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் திருச்சூரை சேர்ந்த தினேஷ்(வயது23), ஆனந்த் (வயது25), காரமடையை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது41) மற்றும் திருவாரூரைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது43) என்பது தெரியவந்தது.



அவர்கள் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்து பார்த்தபோது, அதில், 26 கட்டுகளில் 650 எலக்ட்ரிக் டெட்டனேட்டர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட இந்த வெடிகளை வைத்திருந்த அந்த நபர்களிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அப்போது, சுரேஷ்குமார் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் பழைய கட்டிடங்களை தகர்த்துக் கொடுக்கும் தொழில் செய்கின்ற, காரமடையை சேர்ந்த ரங்கராஜ் என்பவரிடம் வேலை செய்து வருவது தெரியவந்தது.

இந்த நிலையில், ரங்கராஜ் பழைய கட்டிடங்களை தகர்ப்பதற்கு வெடிபொருளை எவ்வித உரிமையுமின்றி, சட்ட விரோதமாக பயன்படுத்தி வருவது போலீசாரின் விசாரணையில் வெளிவந்தது. அவ்வாறு பயன்படுத்தப்படும் எலக்ட்ரிக் டெட்டனேட்டரில் சிலவற்றை அதிக விலைக்கு சட்டத்துக்கு புறம்பாக கேரளாவிற்கு விற்று லாபம் சம்பாதித்திருக்கின்றனர்.

அதனடிப்படையில், காவல்துறையினர் ரங்கராஜ் என்பவரை கைது செய்து, அவரை விசாரித்திருக்கின்றனர்.

அப்போது அவரது வேலை நடந்துவரும் மற்றொரு இடத்திலிருந்து எவ்வித உரிமம் இல்லாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 622 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 350 எலக்ட்ரிக் டெட்டனேட்டர் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

வெடிபொருட்களை ரங்கராஜ் என்பவர் சிறுமுகை சேர்ந்த பெருமாள், அன்னூரை சேர்ந்த கோபால் மற்றும் காரமடையை சேர்ந்த சந்திரசேகரன் ஆகியோரிடமிருந்து வாங்கியிருப்பதும் உறுதியானது.

இதையடுத்து போலீசார் நடத்திய தொடர் விசாரணையின் அடிப்படையில், இதில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டனர். தகவல் அறிந்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கைதானவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 1244 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் மற்றும் 622 ஜெலட்டின் குச்சிகளையும் பார்வையிட்டதோடு, இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு துரித நடவவடிக்கை எடுத்த காவல்துறையினரையும் பாராட்டினார்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...