ஈரோடு இடைத்தேர்தல் வெற்றிக்கு ஸ்டாலின்தான் காரணம்..! - ஈரோட்டில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

ஈரோடு இடைத்தேர்தல் வெற்றிக்காக திமுக அமைச்சர்களின் உழைப்பு என்பது சாதாரண உழைப்பு கிடையாது. அவர்கள் தேர்தலை சந்தித்தபோதுகூட இந்த அளவுக்கு உழைத்திருப்பார்களா? என்ற சந்தேகம் இருக்கிறது என்று காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.


கோவை: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது. தபால் ஓட்டு முதல் அடுத்தடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் முன்னணி வகித்துவருகிறார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் இளங்கோவன் பேசியதாவது:

தேர்தல் காலத்தில் கொடுத்த 80 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதால் மக்கள் இந்த வெற்றியை தந்துள்ளார்கள். ஈரோட்டில் சில திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது. மறைந்த எனது மகன் திருமகன் ஈவேரா விட்டுச்சென்ற பணிகளை தொடர்வேன். இங்கு அமைச்சர் முத்துசாமியோடு சேர்ந்து தமிழக முதல்வரை சந்தித்து ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற பாடுபடுவேன்.

ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதற்கு பெருமையாக இருக்கிறது. ஸ்டாலின் என்னைவிட வயதில் சிறியாதவராக இருந்தாலும் அனுபவத்தில் பல மடங்கு மூத்தவர். அவர் மூலம் இந்த ஊர் மக்களுக்கு பல நல்ல காரியங்கள் செய்வேன். வர இருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.

திமுக அமைச்சர்களின் உழைப்பு என்பது சாதாரண உழைப்பு கிடையாது. அவர்கள் தேர்தலை சந்தித்தபோதுகூட இந்த அளவுக்கு உழைத்திருப்பார்களா? என்ற சந்தேகம் இருக்கிறது. தேர்தல் பணியாற்றிய அமைச்சர் பெருமக்களுக்கு நன்றி. கமலஹாசன், கனிமொழி போன்ற தலைவர்களின் பிரச்சாரத்திற்கு பொதுமக்கள் திரண்டனர்.

கடுமையான வேலையும் பொருட்படுத்தாமல் முதல்வர் மு.க. ஸ்டாலின் இங்கு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த இடைத்தேர்தல் வெற்றி, வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும். எனக்கு வாக்களித்த ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு, அவர் பேசினார்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...