உடுமலை அருகே இறைச்சி கழிவுகளை ஏற்றிவந்த கேரள லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்!

கேரளாவில் இருந்து சட்ட விரோதமாக இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த இரண்டு வாகனங்களை உடுமலை அடுத்த கணபதி பாளையம் பிரிவு அருகே பொதுமக்கள் சிறைபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அனுமதியின்றி கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த இரண்டு லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.

உடுமலை அடுத்துள்ள பொள்ளாச்சி சாலையில் கணபதி பாளையம் பிரிவு பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான உர கிடங்கு உள்ளது. இந்த உரக்கடங்கில் நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து இயற்கை உரமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே சட்டத்திற்கு புறம்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியின்றி அதிக அளவு கேரளா, ஓசூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து இறைச்சி கழிவுகள் கொண்டு வந்து உரக்கிடங்கில் இரவு நேரத்தில் இயந்திரம் மூலம் அரைத்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் அருகிலுள்ள கணபதி, பாளையம் மற்றும் வெனசப்பட்டி உள்ளிட்ட கிராம மக்களும் அருகில் வசிக்கும் தோட்டத்து சாலைப் பகுதியில் வசிக்கும் விவசாயிகளும் கடுமையான பாதிப்பு அடைந்து வருகின்றனர். மேலும் துர்நாற்றம் மூச்சு திணறல், நிலத்தடி நீர் மட்டம் பாதிப்பு உள்ளிட்ட இன்னல்களுக்கும் ஆளாகி வருகின்றனர்.



இந்த நிலையில் கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகள் கொண்டு வந்த இரண்டு வாகனங்களை சிறை பிடித்து விவசாயிகள் உடுமலை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இறைச்சிக் கழிவுகள் தொடர்ந்து கொண்டு வந்து அரைத்து பவுடர் செய்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் கடும் பாதிப்பு அடைந்து வருவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இறைச்சிக் கழிவுகள் அரைப்பதை நிறுத்த வேண்டும். இல்லை என்றால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும், என்றனர்.

Newsletter

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...

Elderly Woman Killed in Truck Collision near Velandipalayam in Coimbatore

A 70-year-old woman was killed after the scooter she was travelling on with her daughter was hit by a heavy truck on Tha...

Break-In: 100 Kg of Silver Stolen from House in Coimbatore’s Oppanakara Street

A major burglary has been reported at the residence of an auditor on Oppanakara Street in Coimbatore, where unidentified...